← முகப்பு செய்திகள்

IND vs AFG: Rishabh Pant Hits Six; Smashes Drone Camera Down on

🕐 07 Jun 2026 📂 செய்திகள் 6 பார்வைகள்
IND vs AFG: Rishabh Pant Hits Six; Smashes Drone Camera Down on

முல்லன்பூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அடித்த சிக்சர் ஒன்று மைதானத்தின் மேல் பறந்து கொண்டிருந்த ட்ரோன் கேமராவைத் தாக்கி கீழே வீழ்த்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (ஜூன் 7) நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, 81 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருந்த ரிஷப் பண்ட், ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிதி வீசிய பந்தை மைதானத்திற்கு மேலே உயரமாக அடித்தார்.

அப்போது காற்றில் பறந்து ஆட்டத்தை படம் பிடித்துக் கொண்டிருந்த 'ட்ரோன்' கேமரா மீது பந்து பலமாகத் தாக்கியது. இதனால் அந்த ட்ரோன் கேமரா கட்டுப்பாட்டை இழந்து உடனடியாக மைதானத்தில் கீழே விழுந்தது. கிரிக்கெட் மைதானங்களில் மிகவும் அரிதாகவே நடக்கும் இந்த வினோத சம்பவம் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.

IND vs AFG Rishabh Pant Hits Six Smashes Drone Camera Down on Day 2 of Afghanistan Test

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 564 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் (100 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன் (81 ரன்கள்) ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் பொறுப்புடன் விளையாடி 126 ரன்கள் குவித்தார்.

நடுவரிசையில் விளையாடிய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களும், அறிமுக வீரர் மானவ் சுதார் 28 ரன்களும் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

சுப்மன் கில்லுக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காதது ஏன்? உண்மையான காரணம் இதுதான்

ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தரப்பில் முகமது சலீம் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவர் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ஜூரல், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போட்டார். எனினும், இந்திய அணி 564 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில் தனது முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்து இருந்தது.

ஸ்ரேயாஸ் ஐயரை விட இவருக்கு தான் கேப்டனாக நிறைய தகுதி இருக்கு.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விவாதம்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net