← முகப்பு தமிழ்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்

🕐 07 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று முன்தினம் (5) கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

அவர்களை தேடும் பணிகள் நேற்று முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடற்தொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்புகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், குறித்த மீனவர்களை கண்டுபிடித்து பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

மீட்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் பாதுகாப்பாக குறிகட்டுவான் இறங்கு துறைக்கு அழைத்து வரப்பட்டு , அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீட்பு நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

மேலும் செய்திகள்
📰
தமிழ்
எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும்
07 Jun 2026
📰
தமிழ்
தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது
07 Jun 2026
📰
தமிழ்
ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன
07 Jun 2026
📰
தமிழ்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தே
07 Jun 2026
📰
தமிழ்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை
07 Jun 2026
📰
தமிழ்
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத்
07 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net