சந்திகார்: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளான இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.
சதமடித்து களத்தில் இருந்த கேப்டன் சுப்மன் கில் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 81 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கீழ் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் எடுத்திருந்தபோது தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சலீம் சஃபி சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்கிய அவர், தனது துல்லியமான பந்துவீச்சால் முக்கிய விக்கெட்டுகளைச் சரித்தார். இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியப் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
IND vs AFG: அடுத்த ஸ்டார் கிடைச்சிட்டாரு! அறிமுக போட்டியில் முதல் ஓவரிலே மானவ் சுதர் விக்கெட் வீழ்த்தி அபாரம்
தொடக்க வீரர்களான அப்துல் மாலிக் (16) மற்றும் செடிகுல்லா அடல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அறிமுக வீரராகக் களமிறங்கிய இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அபாரமாகப் பந்துவீசி ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார்.
அவர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (12) மற்றும் அப்சர் ஜசாய் (3) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணியை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ரஹ்மத் ஷா 43 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தானை விட 451 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியத் தரப்பில் அறிமுக வீரர் மானவ் சுதார் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
IND vs AFG: இந்திய மண்ணில் முதல் விக்கெட்.. பிரசித் கிருஷ்ணா அபாரம்.. தடுமாறும் ஆப்கானிஸ்தான்
சண்டிகரின் கடும் வெப்பம் மற்றும் ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருப்பதால், மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை விரைவில் ஆல்-அவுட் செய்து இன்னிங்ஸ் வெற்றி பெற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, இரண்டாம் நாள் ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் முடிந்தது. இந்திய ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.தி செய்யும்.