← முகப்பு தமிழ்

எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும்

🕐 07 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும்

அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேவையான அளவு மாற்று அரிசி இருப்புகளை பேண இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர் காரணமாக நாட்டில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

போர் மோதல்கள் தொடர்ந்தாலும், ஏற்றுமதி வருமானம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி நாட்டிற்கு சாதக தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் டொலரின் மதிப்பு உயர்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு தற்போதைய அரசாங்கம் மேலும் இடமளிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த பெரும்போகம் மற்றும் சிறு போகங்களுக்கு தேவையான உரங்களை வழங்குவதற்குத் தலையீடு செய்ததைப் போல, அடுத்த பெரும்போகத்திற்கு தேவையான உரங்களை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உர மானியம் 30,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் கீரி சம்பா அரிசி தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக, இந்த வருடத்தில் மாற்று அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்கான கொள்கை ரீதியான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்
07 Jun 2026
📰
தமிழ்
தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று (7) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது
07 Jun 2026
📰
தமிழ்
ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் காணாமல் போன
07 Jun 2026
📰
தமிழ்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தே
07 Jun 2026
📰
தமிழ்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, தனியார் பேருந்து சேவைகளை
07 Jun 2026
📰
தமிழ்
முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே, கடந்த 38 வருடங்களாக நாட்டிற்காகத் தனது உயிரைத்
07 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net