விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்
அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…
Read moreலிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…
Read more
மட்டக்களப்பிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
மட்டக்களப்பில் இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா வரையில் ஊர்வலம் செல்ல ஆயத்தமான நிலையில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு ஊர்வலத்தினை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும் காந்திபூங்காவில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுவதன் காரணமாக அங்கு செல்லமுடியாது என பொலிஸார் தடைகளை ஏற்படுத்தினர்.
எனினும் தமது போராட்டம் வழமையாக காந்திபூங்காவில் நிறைவடைவதனால் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு காணாமல் போனவர்களின் உறவினர்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டன.
எனினும் அங்குசெல்வதற்கு அனுமதிக்கமுடியாது என பொலிஸார் தெரிவித்த நிலையில் கல்லடி பாலத்தில் ஆரம்பித்து தனியார் பஸ் நிலையத்தில் போராட்டத்தினை முடிப்பது என பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து வருகைதந்த ஆயிரத்திற்கும..
ஸ்பெயினிலும் சிறுவர்களுக்கு சமூக வலைத்தள தடை
ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
அதனை தொடர்ந்து ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் வகையிலான புதிய சட்டத்தைக் கொண்டு வர அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறுவர்கள் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கருத்துத் தெரிவிக்கையில், சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் சட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயினும் இந்தத் தடையை அமுல்படுத்தத் தயாராகி வருகின்றது. அதேவேளை ஐரோப்பா முழுவது..
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு
கொழும்பு மத்திய பஸ் நிலைய புனரமைப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் உயர்மட்ட கூட்டமொன்று நேற்று செவ்வாய்கிழமை (3) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.
பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், செயல்பாட்டுத் திறனை ஊக்குவித்தல், மேலும் பொதுமக்களுக்கும் பணியாளர்களுக்கும் தூய்மையான, பாதுகாப்பான மற்றும் பயணிகளுக்கு உகந்த சூழலை உருவாக்குதல் என்ற நோக்குடன், இலங்கை விமானப்படையினால் இந்த புனரமைப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தின்போது, திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
புனரமைப்புப் பணிகள் முழுவதும் உயர்தர கட்டுமானத் தரம் பேணப்படவேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட கால அட்டவணையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பொறியியல், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளுக்கு முழுமையாக இணங்க செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார்.
முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் இந்த நிலையத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், பணிகள் நடைப..
உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் – பிரித்தானிய பிரதமர் கண்டனம்
ரஷ்யா உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டதால் வெப்பநிலை -20°C (-4°F) ஆக குறைந்ததைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மிக மோசமானது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் நீண்ட மின்தடைகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் போர் நிறுத்தம் குறித்து பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், போர் நிறுத்த அழைப்புகளை மறுத்துள்ளார்.
மேலும், உக்ரைனில் புதன்கிழமை அதிகாலை 100 க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பலர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளிடம் விண்ணப்பங்கள் கோரல்
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆசிரியர் சேவைக்கு…
Read more
இலங்கையின் சுதந்திர கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுக்கிறது – உயர்ஸ்தானிகர் வாழ்த்து
இலங்கையின் நம்பிக்கைக்குரிய மற்றும் சார்ந்து நிற்கக்கூடிய பங்காளியாக இலங்கையின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் பங்கெடுத்துக் கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இலங்கை மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், இன்றைய தினம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்த பெருமானின் புனித தெவ்னிமோரி தாதுக்கள் மக்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுவதன் மூலம் இந்த விசேட தினம் மேலும் சிறப்பிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புனித தெவ்னிமோரி தாதுக்களை ஏந்திய இந்திய விமானம் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அனுசரணையுடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும், புத்த பெருமானின் ‘புனித தெவ்னிமோரி தாதுக்கள் தரிசனம் இன்று கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளது.
பதுளையில் தீப்பரவல் – நான்கு பேர் வைத்தியசாலையில்
பதுளை நகரிலுள்ள பிரபல உணவக கட்டடமொன்றில் இன்று காலை (04 ) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் உணவக கட்டடம் தீக்கிரையாகியுள்ளது.
பதுளை மாநகர தீயணைப்பு படையினரின் கடும் முயற்சியினால் தீப்பற்றல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
உணவகத்திலிருந்த உணவு பண்டங்கள், உணவகத்தின் அத்தியாவசிய பொருட்கள் தீக்கிரையாகியுள்ளனதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் உணவகத்திலிருந்து வெளியேற முடியாமல் புகை மண்டலத்தால் மூச்சு திணறலுக்குள்ளாகி காயங்களுடன் நான்கு பேர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்ஸ்டீன் விவகாரம் – பீட்டர் மண்டேல்சனின் நியமனம் குறித்து ஸ்டார்மருக்கு பெரும் அழுத்தம்
2024 ஆம் ஆண்டு முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் அமெரிக்க தூதராக நியமித்தமை குறித்து, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேலும் பல கேள்விகளை எதிர்கொள்வார் என கூறப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு வணிகச் செயலாளராக இருந்தபோது, பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு சந்தை உணர்திறன் கொண்ட அரசாங்கத் தகவல்களை வழங்கியதாக பீட்டர் மண்டேல்சன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பொலிஸார் குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மண்டேல்சன் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாவும் எந்தவொரு சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என்றும், நிதி ஆதாயம் காரணமாக செயல்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மண்டேல்சனை தூதராக நியமிப்பதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடைமுறைகள் குறித்து தகவல்களை வெளியிட கன்சர்வேடிவ் கட்சி, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தொழிலாளர் கட்சியை விட்டு விலகியதைத் தொடர்ந்து, பீட்டர் மண்டேல்சன் பிரபுக்கள் சபையிலிருந்து ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாக..
