← முகப்பு பதிவு

வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட்

🕐 2 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 2 பார்வைகள்
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட் விமானப்படைத் தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளுக்கு எதிராகத் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய விமானப்படைத் தளமே மூலக்காரணம் என்று அது கூறி ஈரான் தாக்குதலைத் தொடுத்தது.
ஈரானிலிருந்து ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் தங்களது பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும், இல்லையெனில் மேலும் கடுமையான அடிகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்தும், தெற்கு லெபனான் முழுவதும் தனது தாக்குதல்களை இஸ்ரேல் அதிகதித்த நிலையில் அனைத்து சிவப்பு கோடுகளையும் இஸ்ரேல் மீறிவிட்டது என்று ஈரான் கூறியது.
அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்ற நிபந்தனையின் பேரில் அமெரிக்காவுடனான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தெஹ்ரான் எரிய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மேலும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ள
2 மணி நேரம் முன்னர்
பதிவு
ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்க
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக
9 மணி நேரம் முன்னர்
பதிவு
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார்
9 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை – 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் பொதுசன நூலக
13 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net