அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்ற நிபந்தனையின் பேரில் அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
ஆனால், லெபனானில் தாக்குதல்களைத் தொடுத்ததன் மூலமும், ஹோர்முஸ் ஜலசந்தி, ஓமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கடற்கரைகள் மற்றும் கப்பல்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி போர் நிறுத்தத்தை மீறியதன் மூலமும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டன என்று அது கூறியது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபோதிலும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்குக் கடற்படை முற்றுகையை விதித்திருப்பதோடு, சமீப நாட்களாக ஈரானுக்கு எதிராகத் தொடர்ச்சியான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
இன்றிரவு நடந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கை என்று ஐ.ஆர்.ஜி.சி தனது அறிக்கையில் கூறியுள்ளதுடன் ஆக்கிரமிப்புகள் மீண்டும் தொடர்ந்தால், பதிலடிகள் இன்னும் விரிவானதாக இருக்கும் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ள
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடி கொடுக்கப்படும் – ஐ.ஆர்.ஜி.சி