← முகப்பு பதிவு

ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்க

🕐 9 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 10 பார்வைகள்
ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்க
கோவில் பிணக்கு கொலையில் முடிவு!

ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (06.06) இரவு இடம்பெற்ற சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காயமடைந்த தாயார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஓமந்தை, நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பரே மரணமடைந்தவராவார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்
பதிவு
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மேலும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ள
2 மணி நேரம் முன்னர்
பதிவு
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக
9 மணி நேரம் முன்னர்
பதிவு
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார்
9 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை – 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் பொதுசன நூலக
13 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net