← முகப்பு பதிவு

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுத

🕐 12 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுத
தீவகத்தில் மாடுகளை திருடிய குற்றத்தில் 07 பேர் கைது

யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 நபர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

வேலணை , புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி ஆகிய பகுதிகளில் பண்ணையாளர்களின் மாடுகள் களவாடப்பட்டு , சட்டவிரோதமாக இறைச்சியாக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது.

அதேவேளை வீடுகளை உடைத்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை களவாடும் சம்பவங்களும் அதிகரித்து இருந்தது.

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்புக்கள் , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 07 நபர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட நபர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்
பதிவு
பல உக்ரேனிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து,
3 மணி நேரம் முன்னர்
பதிவு
நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன், இரண்டு பாலியல் பலாத்காரக் குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடு
5 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில்
11 மணி நேரம் முன்னர்
பதிவு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்
14 மணி நேரம் முன்னர்
பதிவு
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற
1 நாள்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net