← முகப்பு பதிவு

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில்

🕐 11 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில்
நெடுந்தீவுக்கான சேவையில் மீண்டும் வடதாரகை – விரைவில் குமுதினியும் , நெடுந்தாரகையும் இணையும்

நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.

குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை , நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் பழுதடைந்தமையால் நெடுந்தீவுக்கான பயணத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

அந்நிலையில் , குறித்த படகுகளை துரிதமாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதில் வடதாரகையின் திருத்த பணிகள் நிறைவடைந்த நிலையில் , இன்று முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, நெடுந்தாரகை படகு தற்போது காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தில் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதன் பணிகள் நிறைவடைந்தவுடன், அந்தப் படகும் விரைவில் மீண்டும் சேவையில் இணைக்கப்படும்

மேலும், குமுதினி படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் இயந்திர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருத்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், குமுதினி படகும் மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் சேவையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
பல உக்ரேனிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து,
3 மணி நேரம் முன்னர்
பதிவு
நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன், இரண்டு பாலியல் பலாத்காரக் குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடு
5 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி
6 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுத
12 மணி நேரம் முன்னர்
பதிவு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்
14 மணி நேரம் முன்னர்
பதிவு
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற
1 நாள்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net