← முகப்பு செய்திகள்

சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 2 பார்வைகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
தமிழகம் முழுவதும் ரோந்து பணிகள் தீவிரம்: டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தகவல்

சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: காவல் நிலைய அதிகாரி முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை, அனைத்து அதிகாரிகளும் தங்களது எல்கைக்குட்பட்ட பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து காவல் நடை ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் பொதுமக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை அறிதல், நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்தல், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிதல், சமூகவிரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்காணித்து எச்சரித்தல் மற்றும் காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துதல் ஆகியவை ஆகும்.

இந்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் விரிவான காவல் நடை ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூன் 3-ம் தேதி 34 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 28 கூடுதல் கண்காணிப்பாளர்கள், 146 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 499 காவல் ஆய்வாளர்கள் இந்த காவல் நடை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, -4ம் தேதி மாநிலம் முழுவதும் காவல் நடை ரோந்துபணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதில் 56 காவல் கண்காணிப்பாளர்கள், 39 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 215 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 866 காவல் ஆய்வாளர்களும், 5-ம் தேதி 45 காவல் கண்காணிப்பாளர்கள், 32 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 203 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 909 காவல் ஆய்வாளர்களும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த காவல் நடை ரோந்துப் பணிகளின் மூலம், மூத்த காவல் அதிகாரிகள், குற்றம் நடைபெறும் பகுதிகளில் நேரடியாககள ஆய்வுசெய்து, பொதுமக் களுடன் கலந்துரையாடி, அவர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைப் பெற்று, அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
பாராளுமன்றத்துக்குள் இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்மையா?
1 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
India vs Afghanistan Test: India targets a massive first-innings
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகம்
தலையங்கம் · 30 நிமிடங்கள் முன்னர்
4
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழக
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
5
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆ
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
6
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net