விட்டுக்கொடுக்க தயார்:பச்சைக்கொடி!

by admin

இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணை இன்று (24) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வழக்கிற்கு 07 எதிராளிகள் பெயரிடப்பட்டுள்ள நிலையில் 2ம்,4ம் எதிராளிகளான தலைவராக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்,செயலாளராக தெரிவாகிய ச.குகதாசன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி தவராசா முன்னிலையாகியிருந்தார்.

சுமார் மூன்று மணி நேரங்கள் வழக்கு விவாதிக்கப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

கடந்த பெப்ரவரி 15ம் திகதி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 29ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதனிடையே வழக்கு பொதுநலன் கருதி முடிவுக்கு கொண்டு வரவேண்டும் கட்சி யாப்பை மீறியதாக இங்கு எதுவும் சொல்லப்படவில்லை குறிப்பாக சில விதிகளில் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

எனினும் வழக்காளி கோரும் நிவாரணத்தை வழங்க தயாராக இருக்கிறோம், எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை அதனை வழக்காளி தனது சட்டத்தரணி ஊடாக தெரிவிக்க வேண்டும். வழக்கை மீள்ப்பெற வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தரப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்