திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவி தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு !

by admin

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலை மாணவி தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு ! on Saturday, May 04, 2024

அம்பாறை திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் தேசிய பாடசாலையில் தரம் 06ல் கல்வி பயிலும் செல்வி திலீபன் வைபவி எனும் மாணவி தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் குழுமத்தில் இருந்து தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.சாதனை மாணவியைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.கங்காதரன் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் வளாகத்தில்  இடம்பெற்றது.

தேசிய மட்டத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற போட்டியில் பங்கு கொண்டு வெற்றிப் பெற்ற மாணவி மற்றும் பொறுப்பாசிரியை ஆகியோர், மாலை அணிவிக்கப்பட்டு, திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமாரால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்