சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது !

by admin

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது ! on Saturday, May 04, 2024

புத்தளம், நாகவில்லு பகுதியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளைக் கொண்டு செல்ல முயன்ற ஒருவர் புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து சந்தேக நபரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போதே இந்த சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

இதன்போது 4 பண்டல்கள் அடங்கிய 40 பெட்டிகளில் 800 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்படப்பட்டுள்ளன.

புத்தளம், தில்லையடி பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட சிகரெட் பெட்டி, மோட்டார் சைக்கிளும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்