நாளைய வெப்பநிலை குறித்து எச்சரிக்கை !

by admin

நாளைய வெப்பநிலை குறித்து எச்சரிக்கை ! on Saturday, May 04, 2024

நாளை (05) வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (04) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளைய தினம் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அதிக அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலையில் காணப்படக்கூடும் அந்த அறிவிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் வெப்பநிலை கவனம் செலுத்தும் மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்