பன்னிபிட்டிய மர ஆலையொன்றில் தீ விபத்து !

by admin

பன்னிபிட்டிய மர ஆலையொன்றில் தீ விபத்து ! on Monday, April 22, 2024

பன்னிபிட்டிய, லியனகொட பிரதேசத்தில் உள்ள மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால், மரம் அறுக்கும் ஆலை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது

அதன்படி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் தீ பரவியதுடன், பிரதேசவாசிகள் மற்றும் நகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தெஹிவளை நகரசபையின் நீர் பீரங்கிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதன்போது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்