தொடர்ந்தும் எடுபிடி வேலைதான்?

by admin

பொதுவேட்பாளர் என்பதெல்லாம் வேலைக்கு ஆகாதென தெரிவித்துள்ளார் டக்ளஸ்.

ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியிடுபவர்களுடன் எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். அந்தப் பேச்சுவார்த்தைகளில் யார் இணங்குகிறாரோ அவரது வெற்றிக்காக வாக்களித்து அந்த வெற்றியின் பங்காளிகளாக தமிழ் மக்கள் மாறவேண்டும்.  

அதுதான் தமிழ் மக்கள் தமது பிரச்சனைகளை தீர்க்க சரியான வழிமுறையாகும். என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்;. 

மேலும் கருத்து தெரிவிக்கையில் பொதுவேட்பாளரை போட்டியிடச் செய்து உலகுக்கு உணர்த்துவோம் என்பதெல்லாம் வழமையான உசுப்பேத்தலின் ஒரு வடிவம்தான் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தர் இன்று மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்