தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

by admin

on Friday, March 29, 2024

களுத்துறை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர்கள் குழுவொன்றுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 12வயது மற்றும் 13 வயதையுடைய மாணவர்கள் குழுவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதனாலேயே குறித்த 10 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்