மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் பலி !

by admin

மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் பலி ! on Monday, April 29, 2024

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நக்கல பகுதியில் மருமகனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மாமியார் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (29) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மொனராகலை – நக்கல பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண்ணாவார்.

குடும்ப தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபர் தனது மாமியாரையும் மனைவியையும் கத்தியால் குத்தித் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மனைவி மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்