தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்.

by admin

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார். on Monday, April 29, 2024

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார்.

கனடா – டொராண்டோவிலுள்ள வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் தனது 72ஆவது வயதிலேயே பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாத காரணத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறிபோயிருந்தது.

தொடர்புடைய செய்திகள்