கென்னாயாவில் அணை இடிந்து வீழ்ந்தது: 42 பேர் பலி!!

by admin

கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு வடக்கே மாய் மஹியுவில் கனமழை காரணமாக ஒரு அணை இடிந்து விழுந்ததால் பலர் உயிரிழந்துள்ளதாக நகுரு மாகாண ஆளுநர் சூசன் கிஹிகா இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

அணை உடைந்து நீர் புகுந்ததில் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். மேலும் இன்னும் அப்பகுதி சேறும் சகதிமாகக் காணப்படுகிறது.

கனமழைக்கு மத்தியில் பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டன.

மார்ச் முதல், கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 76 பேர் இறந்துள்ளனர், 131,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 

மழை மற்ற கிழக்கு ஆபிரிக்க நாடுகளையும் பாதித்துள்ளது. தான்சானியாவில் 155 இறப்புகள் மற்றும் அண்டை நாடான புருண்டியில் 200,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்