டியூப் லைட்டை மென்றுவிழுங்கிய கைதி வைத்தியசாலையில் அனுமதி !

by admin

டியூப் லைட்டை மென்றுவிழுங்கிய கைதி வைத்தியசாலையில் அனுமதி ! on Monday, April 29, 2024

தும்பறை சிறைச்சாலையில் ஐந்து வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் டியூப் லைட்டை உடைத்து மென்று விழுங்கியதால் சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பளையில் வசிக்கும் 42 வயதான இவர் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவராவார்.

வயிற்றில் ஏற்பட்ட ஏரிவு மற்றும் வலி காரணமாக இவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வயிற்றின் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் தன்னை அறையொன்றுக்கு அழைத்துச் சென்று, தன்னிடம் கையடக்கத் தொலைபேசி இருக்கிறதா என்று விசாரித்துத் தாக்கியதாக சிறைக்கைதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்