← முகப்பு செய்திகள்

Rohit Sharma strongly backs Suryakumar Yadav after his shocking T20I captaincy removal

🕐 07 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
Rohit Sharma strongly backs Suryakumar Yadav after his shocking T20I captaincy removal

மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு, அணியிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். சூர்யகுமாருக்கு அவரது வாழ்க்கையில் எதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மும்பை டி20 லீக் போட்டியின் இடையே நேற்று (ஜூன் 6) செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவின் கடின உழைப்பைக் குறித்துப் பேசினார். "சூர்யகுமாருக்கு அவரது கிரிக்கெட் பயணத்தில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அவர் தனது 30 அல்லது 31 வயதில்தான் இந்திய அணியில் அறிமுகமானார். இதன் பொருள் அவர் ஒருபோதும் தனது முயற்சியைக் கைவிடவில்லை என்பதாகும். வாய்ப்பு கிடைத்தபோது அதை இரு கைகளாலும் அவர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்" என்று ரோஹித் புகழ்ந்துள்ளார்.

Rohit Sharma Emotional on Suryakumar Yadav Sacking Nothing Came Easy for Surya in His Career

கடந்த 2021 மார்ச் மாதத்தில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், இதுவரை 113 டி20 போட்டிகளில் விளையாடி 36.35 சராசரியுடன் 3,272 ரன்கள் குவித்துள்ளார். இதில் 25 அரைசதங்களும், 4 சதங்களும் அடங்கும். இந்த ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள அவரது தலைமையிலான ஆட்டம் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், 2028 ஒலிம்பிக் மற்றும் டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு தேர்வுக்குழுவினர் தற்போது அவரை அணியிலிருந்து நீக்கியுள்ளனர்.

சூர்யகுமாருக்கு ஆறுதல் சொன்ன அதே வேளையில், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்கும் ரோஹித் சர்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை 2024 இல் சாம்பியனாக்கியும், 2025 இல் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றும் ஸ்ரேயாஸ் தனது திறமையை நிரூபித்துள்ளார். "ஐபிஎல் தொடர்களில் அவர் அணியை வழிநடத்திய விதத்தைப் பார்க்கும்போது, இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று ரோஹித் கூறினார்.

கேப்டன் பதவி பறிபோன உடன் ஸ்ரேயாஸ் உடன் சூர்யகுமார் மோதல்.. கூடவே அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்

மேலும், மும்பை கிரிக்கெட்டில் விளையாடுவது ஒரு வீரருக்குப் பொறுமையையும், அழுத்தங்களை எதிர்கொள்ளும் குணத்தையும் கற்றுக்கொடுக்கும் என்று ரோஹித் குறிப்பிட்டுள்ளார். "மும்பையில் எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது. நாம் அதைத் திறமையால் மட்டுமே சம்பாதிக்க வேண்டும். கேப்டன் பதவியும், சக வீரர்களின் மரியாதையும் நாம் உழைப்பால் பெற வேண்டிய ஒன்றாகும்" என்று ரோஹித் சர்மா கூறினார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net