ஜனாதிபதியின் வெளிநாட்டு பயண விவகாரம் நாளை பாராளுமன்றத்திற்கு ! on Monday, April 22, 2024
ஜனாதிபதியின் நாட்டுப் பயண விவகாரம் நாளை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கலந்து கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொண்ட செலவுகள் தொடர்பான விடயம் நாளை (24ம் திகதி) நடைபெறவுள்ள பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இதுவரையில் பங்குபற்றிய வெளிநாட்டுப் பயணங்கள், ஒவ்வொரு பயணத்தின் போதும் சந்தித்த வெளிநாட்டுத் தலைவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த அரச தலைவர்களுடன் இராஜதந்திர ரீதியில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அந்த உடன்படிக்கைகளை எட்டுவது தொடர்பிலும் கேட்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்திலும் ஜனாதிபதியுடன் பங்குபற்றிய தூதுக்குழுவினருக்கு தனித்தனியாகவும் அதற்காக செலவிடப்பட்ட தொகையும் வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்ட சபை உறுப்பினர் ஜயந்த சமரவீர பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இந்தக் கேள்வியை முன்வைத்துள்ளார்.