ஹொரணை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !

by admin

ஹொரணை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது !

ஹொரணை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்டபோது இன்று (05) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஹொரண கிரேஸ்லண்ட்வத்த பிரதேசத்தில் இன்று (05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 35 வயதுடைய வர்த்தகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் தற்போது ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த வர்த்தகருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்