← முகப்பு தலையங்கம்

மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக

🕐 05 Jun 2026 📂 தலையங்கம் 4 பார்வைகள்
மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக

மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உரிய தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்தார்.

முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைகளுடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இந்த விதிமுறைகள் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய விதிமுறைகளின் கீழ், நாட்டில் இயங்கும் அனைத்து முதியோர் பராமரிப்பு நிலையங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்க செயல்பட வேண்டும். பதிவு செய்யப்படாத அல்லது சட்டவிரோதமான இடங்களில் முதியோர்களை தங்க வைப்பதை தவிர்க்குமாறு பாதுகாவலர்களிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில முதியோர் இல்லங்கள் உயர்தர சேவைகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், சில இடங்களில் போதிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேவையான பணியாளர்கள் இல்லாத நிலையும் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

இதனால் தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற பராமரிப்பு நிலையங்களை எதிர்காலத்தில் தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படாது என்றும், அவற்றுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் தற்போது சுமார் 455 பதிவு செய்யப்பட்ட முதியோர் இல்லங்கள் இயங்கி வருவதாகவும், அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படும் முதியோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை மூன்றாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
தீ பரவியதும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், ஹொரணை தீயணைப்புப் பிரிவினரும் சம்பவ
05 Jun 2026
தலையங்கம்
இன்றிரவு (05) இரவு 08 மணி வரை பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும்
05 Jun 2026
தலையங்கம்
100 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 11 அன்று புதன் மற்றும் சுக்கிரன் ஒரே நட்சத்திரத்தில் நுழையும்
05 Jun 2026
தலையங்கம்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அரசு அங்கன்வாடி (Anganwadi) மையத்தில், பச்சிளம் குழந்தை ஒன்றின
31 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்று
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் மையப்பகுதியாக விளங்கும் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ‘பெடரேஷன் வாலோனியா-பிரஸ்ஸல்ஸ்’ நாடாளுமன்ற
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net