← முகப்பு தமிழ்

(இராஜதுரை ஹஷான்)வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர

🕐 05 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்கிறது. அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதால் உண்மை வெளிவராது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் குரல் அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தால் நாட்டு மக்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இன்று இலக்கு வைக்கப்படுகிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்கிறது. அரசியல் நோக்கத்தை இலக்காகக் கொண்டு செயற்படுவதால் உண்மை வெளிவராது.

அரசியல் பழிவாங்கலை இலக்காகக் கொண்டு தான் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்றத்தின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. சகல நெருக்கடிகளுக்கும் நீதிமன்றம் ஊடாக நாங்கள் தீர்வு காண்போம்.

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், எமக்கும் இடையில் கடும் போட்டி நிலவும். சகல எதிர்க்கட்சிகளும் பொது நோக்கத்துடன் செயற்படுவது பாரியதொரு வெற்றியாகும் என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
சமூக ஊடகங்களில் பரவி வரும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரைத் தாக்கும் காணொளியில் இடம்பெற்ற சந்தேகநபர்
05 Jun 2026
📰
தமிழ்
“உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகள
05 Jun 2026
📰
தமிழ்
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர்
05 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு
05 Jun 2026
📰
தமிழ்
உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்
05 Jun 2026
📰
தமிழ்
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சமுத்ரவிஜய போர்க் கப்பல் இலங்கை கடற்படை சேவையில
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net