← முகப்பு பதிவு

போலந்திற்கு 5,000 துருப்புகளை அனுப்புவது குறித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் அறிவிப்பைத் தாம் வரவேற்பதாக

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 38 பார்வைகள்
போலந்திற்கு 5,000 துருப்புகளை அனுப்புவது குறித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் அறிவிப்பைத் தாம் வரவேற்பதாக
போலந்திற்கு கூடுதலாக 5,000 அமெரிக்கப் படைகள்: நேட்டோ வரவேற்பு!

போலந்திற்கு 5,000 துருப்புகளை அனுப்புவது குறித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் அறிவிப்பைத் தாம் வரவேற்பதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே கூறினார் .
ஸ்வீடனில் நடைபெறவுள்ள நேட்டோ கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரூட்டே கூறினார்.
தனது நட்பு நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் நோக்கில், போலந்திற்கு 5,000 துருப்புகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
போலந்தின் தற்போதைய ஜனாதிபதி கரோல் நவ்ரோக்கியின் வெற்றிகரமான தேர்தல் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்கா போலந்திற்கு கூடுதலாக 5,000 துருப்புகளை அனுப்பும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் எழுதியிருந்தார்.
ஆனால், போலந்திற்கு ஒரு படைப்பிரிவு (4,000 முதல் 4,700 வீரர்கள்) அனுப்புவதை நிறுத்தி வைப்பதாக பென்டகன் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த முடிவு டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் அறிவிப்பின்படி, அந்தப் படைப்பிரிவு போலந்திற்கு மீண்டும் அனுப்பப்படுமா, அந்த சுழற்சி முறையிலான நிலைநிறுத்தத்திற்கு மேலாகக் கூடுதல் துருப்புக்கள் சேர்க்கப்படுமா, அல்லது ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கத் துருப்புக்கள் வேறு ஒரு நாட்டிலிருந்து குறைக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மே மாத தொடக்கத்தில் ஜெர்மனியில் உள்ள அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதாக டிரம்ப் கூறினார். ஐரோப்பியக் கண்டத்தின் பாதுகாப்பிற்கான முதன்மைப் பொறுப்பை அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பா ஏற்கும் என நம்புவதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net