← முகப்பு பதிவு

போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு செய்தமை விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 பதிவு 20 பார்வைகள்
போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு செய்தமை விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு
விமல் வீரவங்ச உட்பட 35 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு செய்தமை விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தேசிய போர் வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ போர்வீரர்கள் நினைவுச் சின்னம் முன்பாக நினைவு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்விற்கான ஒத்திகை நேற்று (18)அன்று நடைபெற்றது.

இந்த ஒத்திகை மற்றும் பிரதான நிகழ்விற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உட்பட சுமார் 35 பேர் கொண்ட குழுவொன்று, அதிகாரிகளின் கடமைகளுக்கும் ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அனுமதியின்றி போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் முயற்சியை தடுத்து, அங்கு இருந்த குழுவினரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
9 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
9 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
10 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
12 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net