டீசல் வாகனங்களில் 50% கரும்புகை வெளியேற்றம்
பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் டீசல் வாகனங்களில் 50 சதவீதமானவை அதிக கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1,000 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களில் விசேட பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதிக கரும்புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதுடன், அத்தகைய வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.