சென்னை புறநகர்ப் பகுதியில் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலுக்கு மத்தியில், பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் போடப்பட்ட போர்வெல் (Deep borehole) பணிகளைத் திமுக வட்ட செயலாளர் மற்றும் நகர்மன்றத் தலைவர் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளதாகப் பெண் கவுன்சிலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு தனிநபரின் கமர்சியல் பில்டிங் லாபத்திற்காக 4,000 மக்களின் குடிநீர் உரிமையைப் பறிக்கும் இந்த அத்துமீறல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட நகராட்சியின் 12-ஆவது வார்டு கவுன்சிலர் ஜானகி சொல்லமணி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “வார்டில் இருந்த 5 போர்வெல்களிலும் கடந்த மாதமே தண்ணீர் முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும். இதுகுறித்து நகராட்சிக்குக் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து. புதிய போர்வெல் போட ஆரம்பித்தார்கள்.’கிரீன் பார்க்’ பகுதியில் நீரோட்டம் நன்றாக இருந்த இடத்தை அதிகாரிகளே கண்டறிந்து போர் போட்டுள்ளனர். ஆனால், அந்தப் போர் போடப்பட்ட இடத்திற்குப் பக்கத்தில் கமர்சியல் அப்பார்ட்மெண்ட் (Commercial apartment) கட்டி வரும் திமுக வட்ட செயலாளரான கண்ணன் என்பவர், இதை தடுப்பதாக” குற்றம்சுமத்தியுள்ளார்.
இதுகுறித்து நகராட்சி நகர்மன்றத் தலைவரிடம் கவுன்சிலர் ஜானகி போனில் முறையிட்டபோது, அவரும் வட்ட செயலாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளார். மேலும், வட்ட செயலாளர் கண்ணனின் மனைவியும், “13-ஆவது வார்டில் இருந்து 12-ஆவது வார்டிற்குத் தண்ணீர் தர முடியாது” என்று கூறி அந்தப் போரை வலுக்கட்டாயமாக மூட வைத்துள்ளதாகக் கவுன்சிலர் வேதனை தெரிவித்துள்ளார்.
“ஓட்டுப் போட்ட 4,000 குடும்பங்களுக்குத் தண்ணீருக்கு நான் எங்கே போவேன்? ஒரு தனி மனிதன் அப்பார்ட்மெண்ட் கட்டி வாடகை வசூல் செய்வதற்காக ஒட்டுமொத்த மக்களின் தண்ணீரைத் தடுப்பதா?” என்று கவுன்சிலர் கேள்வி எழுப்பியுள்ளார். போர்வெல் வெற்றிகரமாகத் தோண்டப்பட்டுவிட்ட நிலையில், திமுக செயலாளர் தடுத்து நிறுத்திய இந்தச் சம்பவத்தில், நகராட்சி ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுத் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.t