← முகப்பு தமிழ்

ஈரானுடனான அமைதி உடன்படிக்கை தற்போது முழுமையடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அ

🕐 4 மணி நேரம் முன்னர் 📂 தமிழ் 8 பார்வைகள்

அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ஹோர்முஸ் அருகே முன்னெடுக்கப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையை உடனடியாக நீக்குவதற்கு தாம் இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்த சில நிமிடங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியானது.

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திடப்படும் என்று ஷெரீப் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் இறுதி செய்யப்பட்ட வரைவில் ஈரானும், அமெரிக்காவும் ஜூன் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடும் என்று சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி தெரிவித்துள்ளதாக தஸ்நிம் செய்தி நிறுவனமும் தகவல் வௌியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வர்த்தகர் கொலை உட்பட 5 மனிதக்
15 Jun 2026
📰
தமிழ்
கண்டி – யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் இன்று (15) பிற்பகல் பாடசாலை
15 Jun 2026
📰
தமிழ்
100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவும் ஈரான
15 Jun 2026
📰
தமிழ்
(எம்.ஆர்.எம்.வசீம்)நாட்டின் வளங்களை பாதுகாப்பதாக பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் கண்டி மாவட்டத்த
21 நிமிடங்கள் முன்னர்
📰
தமிழ்
(க.சிவலிங்கமூர்த்தி)தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பன்னிரண்டாவது தேசிய மாநாடு வவுனியா மாவட்டத்தில் உள்ள வோர்ஸ் ம
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள்
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net