மும்பை: இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், வரும் ஜூன் 13-ம் தேதி தொடங்குகிறது. ஐபிஎல் 2026 தொடர் நிறைவடைந்த பிறகு, இந்திய அணி எதிர்கொள்ளும் முக்கியமான தொடராக இது பார்க்கப்படுகிறது. இந்தத் தொடருக்குத் தயாராகும் முயற்சியில் கேப்டன் ரோகித் சர்மா தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் தனது பார்மை மீட்டெடுக்கும் நோக்கில், அவர் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் தனிப்பட்ட முறையில் தீவிரப் பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதற்காக பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திடம் முறைப்படி அனுமதி கோரியுள்ள அவர், சிறந்த பயிற்சி வசதிகளைப் பயன்படுத்தி தனது பேட்டிங் நுட்ப குறைகளைச் சரிசெய்ய முனைப்பு காட்டுகிறார்.

ஐபிஎல் 2026 லீக் சுற்றின் போது ரோகித் சர்மா காயம் அடைந்தது அணியின் சமநிலையை பாதிக்கும் வகையில் இருந்தது. தசைநார் காயம் காரணமாக அவர் சில முக்கியமான போட்டிகளில் பங்கேற்கவில்லை. பிசிசிஐ-ன் தற்போதைய ஒப்பந்தமுறை விதிப்படி, காயம் அடைந்த வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தகுதியான மருத்துவக் குழுவிடம் பரிசோதனை செய்து, முழுமையான உடல் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.
மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது, ரோகித் சர்மாவின் தனிப்பட்ட ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடரின் இறுதிப் பகுதிகளில் அவரது பேட்டிங் பார்ம் சுமாராகவே இருந்தது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் அவர் பெரிய ரன்களைக் குவிக்கத் தவறினார். இதனால், சர்வதேச ஒருநாள் அரங்கில் அவரது தற்போதைய பார்ம் குறித்து வல்லுநர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் அவர் காட்டும் நிதானம் மற்றும் தொடக்க வீரராக அவர் நிலைத்து நிற்கும் திறன் ஆகியவை இந்தத் தொடரில் சோதிக்கப்படும்.2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை உருவாக்குவது தற்போது பிசிசிஐ-யின் முக்கிய இலக்காக உள்ளது. இதற்கு மூத்த வீரர்களின் உடல் தகுதி மற்றும் பேட்டிங் பார்ம் மிக முக்கியமானதாகும்.
IPL 2026: மோசமான முறையில் விளையாடிய 5 ஸ்டார் வீரர்கள்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் தர்மாசாலாவில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து லக்னோ மற்றும் சென்னையில் பிற போட்டிகள் நடக்கின்றன. வெவ்வேறான சூழல் மற்றும் ஆடுகளங்களில் விளையாடும் போது, ரோகித் சர்மா தனது பார்மை மீட்பது மட்டுமின்றி, அணியின் இளைய வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.