← முகப்பு செய்திகள்

PAK vs AUS: Pakistan defeated Australia by 4 wickets in the 3rd

🕐 05 Jun 2026 📂 செய்திகள் 8 பார்வைகள்
PAK vs AUS: Pakistan defeated Australia by 4 wickets in the 3rd

லாகூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணி முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் ஜோஷ் இங்லிஸ் தலைமையில் களமிறங்கி மோசமான ஆட்டத்தை ஆடி தொடரை இழந்தது.

லாகூரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால், பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். அந்த அணி 42 ஓவர்களில் 157 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் ஜோஷ் இங்கிலிஸ் 71 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தார். மார்னஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி ஆகியோர் தலா 19 ரன்கள் எடுத்தனர்.

PAK vs AUS Pakistan Beats Australia by 4 Wickets to Clinch ODI Series 2-1 as Shaheen and Shadab Shine

பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அப்ரிடி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு பக்கபலமாக இருந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அப்ரார் அகமது 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஷதாப் கான் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆஸ்திரேலிய அணி கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 38 ரன்களுக்குள் இழந்து சரிவைச் சந்தித்தது.

158 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணியும் ஒரு கட்டத்தில் தடுமாறியது. ஆஸ்திரேலியாவின் மேத்யூ குஹ்னெமன் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்தார். கேப்டன் பாபர் அசாம் 40 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 112 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த ஷதாப் கான் மற்றும் அப்துல் சமத் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. பாகிஸ்தான் அணி 41.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷதாப் கான் 29 ரன்களுடனும், அப்துல் சமத் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. மஜா ஸ்வாலின்ஸ்கா இறுதிப் போட்டிக்கு தகுதி

இதற்கு முன்பு ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. லாகூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தற்போது 3-வது போட்டியை வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி தொடர்ந்து 3-வது முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net