← முகப்பு செய்திகள்

IPL 2026- Bhuvneshwar Kumar Costly Spell Yields 51 Runs and joints worst

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
IPL 2026- Bhuvneshwar Kumar Costly Spell Yields 51 Runs and joints worst

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஒரு இன்னிங்ஸில் 50-க்கும் மேற்பட்ட ரன்களை ஒன்பது முறை விட்டுக்கொடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சோகமான சாதனையைப் படைத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 51 ரன்களை விட்டுக்கொடுத்ததின் மூலம் இந்தச் சாதனையை எட்டியுள்ளார்.

இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அடுத்தபடியாக புவனேஷ்வர் குமார் இந்த விரும்பத்தகாத பட்டியலில் இணைந்துள்ளார். எட்டு முறைக்கு மேல் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்த மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை அவர் இப்போது தாண்டியுள்ளார்.

ஐபிஎல் 2026-ன் பர்ப்பிள் கேப் உரிமையாளரான புவனேஷ்வர், ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு (எஸ்ஆர்ஹெச்) எதிராக 0/51 ரன்களை விட்டுகொடுத்தார்.ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த வெள்ளிக்கிழமை போட்டியில், ஒரு பிளாட் டிராக்கில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு கடினமான நாளாக அமைந்தது.

பவர்பிளேயில் பந்தில் எவ்வித அசைவும் இல்லாததால், அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற தொடக்க ஆட்டக்காரர்கள் அவரை எளிதாக எதிர்கொண்டு, அவரது முதல் இரண்டு ஓவர்களில் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை விளாசினர். இதன் விளைவாக, களத்திலிருந்த ராஜத் படிதர், முதல் ஆறு ஓவர்களில் அவருக்கு மூன்றாவது ஓவர் கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தார்.

பின்னர் அவர் 15வது ஓவரில் பந்துவீச வந்தார். ஹெய்ன்ரிச் கிளாசன் மற்றும் இஷான் கிஷன் இடையேயான தீவிரமான பார்ட்னர்ஷிப்பால், இன்னும் மூன்று பவுண்டரிகளை மற்றும் ஒரு சிக்ஸரையும் புவனேஷ்வர் சந்தித்தார். இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இன்னிங்ஸில் 255/4 ரன்களைக் குவித்தது.

இப்போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தங்கள் சொந்த மண்ணில் சற்றும் பயமில்லாத பேட்டிங் அணுகுமுறையைத் தொடர்ந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக மிகப்பெரிய ஸ்கோரான 255/4 ரன்களைக் குவித்து அசத்தியது.அபிஷேக் ஷர்மா 22 பந்துகளில் அதிரடியான 56 ரன்கள் எடுத்து, ஆட்டத்திற்குத் தேவையான வேகத்தை ஆரம்பத்திலிருந்தே கொடுத்தார். பவர்பிளேயில் புவனேஷ்வர் குமார் வீசிய பந்துகளைக் கச்சிதமாக விளாசினார்.

மறுமுனையில், இஷான் கிஷன் 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து, சரியான நேரத்தில் பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டைக் கட்டுக்குள் வைத்திருந்தார். அடுத்ததாகக் களம் கண்ட ஹெய்ன்ரிச் கிளாசன், வெறும் 24 பந்துகளில் 51 ரன்கள் குவித்து, ஆர்சிபி பந்துவீச்சாளர்களை இறுதி ஓவர்களில் நிலைகுலையச் செய்தார். குறிப்பாக, தென் ஆப்பிரிக்க வீரர் ஹேஸில்வுட்டின் ஒரு ஓவரில் 27 ரன்களை எடுத்து எஸ்ஆர்ஹெச் அணியின் ஸ்கோரை 250-ஐத் தாண்ட உதவினார்.

IPL 2026: சிஎஸ்கே பிளே ஆப்க்கு கண்டிப்பாக சென்று இருக்கும்.. தோல்விக்கு முக்கிய காரணமே இதுதான்

பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளத்தில், ஆர்சிபி அணியின் மற்ற பந்துவீச்சாளர்களும் பதிலளிக்க முடியாமல் திணறினர். எஸ்ஆர்ஹெச் அணி 20 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களை விளாசித் தள்ளியது. இறுதியாக, நிதிஷ் குமார் ரெட்டி 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ரன்கள் குவித்து அபாரமான முடிவைக் கொடுத்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net