மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர்கள் குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோரின் தேர்வைக் குறிப்பிட்டு, இந்தியத் தேர்வுக்குழுவை முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ஒரு வீரரின் தகுதியை வெறும் புள்ளிவிவரங்களை மட்டும் வைத்து மதிப்பிட முடியாது. புள்ளிவிவரங்கள் மட்டுமே தகுதிக்கான அடிப்படை என்றால், ஒரு புள்ளிவிவர நிபுணரை கூட தேர்வாளராக மாற்றிவிடலாம். ஆனால், தேர்வுக்குழு வீரர்கள் காட்டும் பந்துவீச்சு வேகம் மற்றும் பவுன்ஸைக் கவனித்துத் தேர்வு செய்துள்ளது” என்றார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளை (3/27) வீழ்த்தி அசத்தினார். அவரது அறிமுகம் குறித்துப் பேசிய சோப்ரா, "மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போது, பலரும் பிரின்ஸ் யாதவ் தான் விளையாடுவார் என்று நினைத்தனர். ஏனெனில் பிரார் அதற்கு முன்னதாக டி20 தொடர்களில் விளையாடவில்லை. ஆனால், இந்திய அணி நிர்வாகம் ஏற்கனவே பிராரை விளையாட வைக்கத் திட்டமிட்டிருந்தது. அவரது உயரம், பந்துவீச்சு வேகம் (மணிக்கு 145 கிலோமீட்டருக்கும் மேல்) மற்றும் பவுன்ஸ் ஆகியவை தான் அவரது தேர்வுக்குக் காரணம். வெறும் 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த பிராரின் திறமையைக் கண்டறிந்து வாய்ப்பளித்துள்ளனர்" என்றார்.

மற்றொரு அறிமுக வீரரான சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே குறித்து சோப்ரா பேசுகையில், "தேர்வுக்குழுவினர் வீரர்களைச் சரியாக வளர்த்து வருகிறார்கள். மானவ் சுதார் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவர். ஆனால், ஹர்ஷ் துபே பந்துவீசுவதுடன், பேட்டிங் மற்றும் பீல்டிங்கிலும் அசத்தும் ஆல்ரவுண்டர் ஆவார். அவரது பந்துவீச்சு வேகம் மற்றும் லாவகம் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு மிகவும் உகந்தது. அதனால்தான் மானவ் சுதாரை விடுத்து இவருக்கு வாய்ப்பளித்துள்ளனர்" என்று கூறினார்.
IND vs PAK: ‘140 கோடி இந்தியர்களை..’ பாகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிரணி.. கம்பீர், ரோஹித் வாழ்த்து
அறிமுகப் போட்டியில் முதல் ஓவரில் 16 ரன்கள் கொடுத்த போதிலும், மீண்டு வந்து 3 முக்கிய விக்கெட்டுகளை (3/47) வீழ்த்தி ஹர்ஷ் துபே தனது திறமையை நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.