கிளிநொச்சியில் 04 கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது

by admin

கிளிநொச்சியில் 04 கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு பொலிஸ் விசேட அதிரடி படையினர் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த கார் ஒன்றினை மறித்து சோதனையிட்டனர். 

அதன் போது காரினுள் இருந்து 04 கிலோ தங்கத்தை மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து காரில் பயணித்த இரு பெண்கள் மற்றும் கார் சாரதி ஆகிய மூவரையும் கைது செய்து , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நகர் பகுதிக்கு தங்கத்தை எடுத்து சென்ற வேளையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்