நடிகை தமிதா அபேரத்ன மீது மற்றுமொரு முறைப்பாடு !

by admin

நடிகை தமிதா அபேரத்ன மீது மற்றுமொரு முறைப்பாடு ! on Friday, April 19, 2024

சிறையில் உள்ள நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் மீது பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மற்றுமொரு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

குறித்த நபரிடம் இருந்து 34 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு 4 இலட்சம் ரூபாவை திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு எதிராக நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்