ஒன்மெக்ஸ் டீடி பிரமிட் முதலீட்டுத் திட்டம் ; பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணத்தை வழங்கும் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவு !

by admin

ஒன்மெக்ஸ் டீடி பிரமிட் முதலீட்டுத் திட்டம் ; பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணத்தை வழங்கும் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவு ! on Thursday, May 02, 2024

ஒன்மெக்ஸ் டீடி பிரமிட் முதலீட்டுத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பண வைப்பாளர்களுக்கு பணத்தை மீண்டும் வழங்கும் திட்டத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே சம்பவத்தில் தொடர்புடைய பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டின் விசாரணையானது இன்று (02) வியாழக்கிழமை இடம்பெற்றபோது பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன்மேக்ஸ் நிறுவனத்தின் நான்கு பணிப்பாளர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதன்போது, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை அடிப்படையாக கொண்டே நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்