போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது !

by admin

போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ! on Thursday, May 02, 2024

அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளின் போராட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவினால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அரச நிறைவேற்று உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (02) நாளையும் (03) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்