பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகநபர் கைது !

by admin

பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த சந்தேகநபர் கைது ! on Thursday, May 02, 2024

பஸ் சாரதிகளுக்குக் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்வதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை நகரத்தில் உள்ள பஸ் சாரதியொருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் மற்றும் 26 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்