தேவலாய பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கவும் !

by admin

தேவலாய பிரதேசங்களில் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கவும் ! on Friday, March 29, 2024

நாடளாவிய ரீதியில் உள்ள 2,978 கிறிஸ்தவ தேவாலயங்களில் 2,230 தேவாலயங்களில் ஈஸ்டர் ஆராதனைகள் நடைபெறவுள்ளதுடன் அங்கு பொலிஸார் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

6,837 பொலிஸாரும், 464 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் , 2,882 இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தேவலாய பிரதேசங்களில் ஏதேனும் சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால், 119, 118 மற்றும் 1927 ஆகிய எண்களுக்கு உடனடியாக அறியப்படுத்தமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

தொடர்புடைய செய்திகள்