மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (05) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இளைஞன் காதலிப்பதாக கூறி சிறுமியை வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் சம்பவத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.