வலிந்து காணாமலாக்கப்பட்ட தனது இரண்டு மகன்கள் மற்றும் மருமகனுக்கு நீதி கோரி பல ஆண்டுகளாகப் போராடிவந்த முல்லைத்தீவு, முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை செல்லம்மா (வயது 74) கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி காலமானார்.
தனது கணவர் மறைந்து இரண்டே மாதங்களில் தனது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமலேயே செல்லம்மாவும் தற்போது உயிரிழந்துள்ளார்.