← முகப்பு தலையங்கம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 66 பார்வைகள்
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள மிளகாய் தோட்டக் குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளார். கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியில் அமைந்துள்ள இந்த தோட்டத்தில் இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த சடலத்தை களுவாஞ்சிகுடி பொலிஸார் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது அவர் தனது தோட்டத்தில் வேலை செய்து முடித்து அங்குள்ள குடிசையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

குடிசையில் அவர் இரத்தத்தில் மூழ்கிய நிலையில் உயிரிழந்திருந்ததை கவனித்த உறவினர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம். ரியாஸ் தலைமையிலான குழு ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்டது.

பின்னர் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப் குமார் மற்றும் தடயவியல் பிரிவு, குற்றத்தடுப்பு பிரிவு உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்
தலையங்கம்
வீட்டில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குப் பேன் மற்றும் ஈறுத் தொல்லை பொதுவான பிரச்சினை. வேப்பிலை, படிகாரம்,
06 Jun 2026
தலையங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம
06 Jun 2026
தலையங்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்மாய் பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க 10-ஆம் வகுப்பு பள்ளி
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா (மாநிலங்களவை) இடைத்தேர்தலில், ஆளும் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் (University of Surrey) வளாகத்தில்
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக் (Anthropic), அதிநவீன ஏஐ
6 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net