← முகப்பு செய்திகள்

“தமிழ் மொழி சார்ந்த அனைத்துத் தளங்களிலும் அர்ப்பணிப்பும் இதயசுத்தியும் நிறைந்தவராய் நின்று நிலைப்பவர் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா ஆவார்”.

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
“தமிழ் மொழி சார்ந்த அனைத்துத் தளங்களிலும் அர்ப்பணிப்பும் இதயசுத்தியும் நிறைந்தவராய் நின்று நிலைப்பவர் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா ஆவார்”.

அவரது மூன்று நூல்கள் மற்றும் இசைப்பேழை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம்

” கனடாவில் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா என்னும் தமிழ்ப் புலமையாளர் சாதாரணமானவர் அல்ல. அவரது உழைப்பும். ஈடுபாடும் தேடலும் போற்றுதலுக்கும் பாராட்டுக்களுக்கும் உரித்தானவை. ஆனால் அவற்றையெல்லாம் எதிர்பார்த்து அவர் தன் மொழி மற்றும் இலக்கியம் சார்ந்து பயணிப்பவர் அல்ல. தன் பணியை கண்ணியமாகவும் நேர்த்தியாகவும் ஆற்றி எம் மொழியையும் இலக்கியத்தையும் கவிதையையும் எம் மத்தியில் நிலைக்கச் செய்ய வேண்டும் என்ற ஆவல் கொண்டவர். இந்த வகையில் தமிழ் மொழி சார்ந்த அனைத்துத் தளங்களிலும் அர்ப்பணிப்பும் இதயசுத்தியும் நிறைந்தவராய் நின்று செயற்படுபவர் என ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா அவர்களுக்கு புகழாரம் சூட்டுவோம்”.

இவ்வாறு ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா அவர்களின் மூன்று நூல்களான ‘கம்பனின் கருவூலம் திறந்து’ , எது சரி, ஏன் சரி?” மற்றும் ‘முனையிலே முகத்து நில்; ஆகியவை மற்றும் இசைப்பேழை வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பலரும் புகழாரம் சூட்டினார்கள்.

அன்றுவெளியிடப்பெற்ற மூன்று நூல்களும் கனடிய கலை இலக்கியப் பெரு ஏடான ‘தாய்வீடு’ இதழ்களில் பிரசுரமாகியதோடு அதன் வெளியீடாகவும் அமைந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விழாவின் ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய அவரது புதல்வரும் ரொறன்ரோ மாநகரசபையின் உறுப்பினருமான நீதன் சண்முகராஜா தன் பணியைச் சிறப்பாக ஆற்றினார். அவரைத் தொடர்ந்து தொகுப்பாளராக வந்த கவிஞர் சுகந்தனும் உரையாளர்களையும் விமர்சகர்களை ஏற்றவகையில் அழைத்து விழாவை நகர்த்திச் சென்றார்.

அன்றைய விழாவிற்கு தலைமை தாங்கிய பாவலர் அகணி சுரேஸ் அவர்கள் தொடர்ந்து ஆய்வரங்கத்தை சிறப்பாக வழி நடத்திச் சென்றார். தொடர்ந்து இசைப்பேழை வெளியீட்டுப் பகுதியை திருமதி ராஜ்மீரா இராசையா தொகுத்து வழங்கினார். தகமையும் பண்பும் நிறைந்த உரையாளர்கள் பலர் அங்கு உரைகளை வழங்கி விழாவின் தரத்தையும் உயர்த்தியவர்களாய் ‘மாவிலி மைந்தன்’ சண்முகராஜா அவர்களின் ஆற்றல். கற்றல். தேடல். கற்பித்தல். மரபுக்கவிதை மீது கொண்ட அவரது நாட்டம் ஆகிய ஆற்றல்கள் சங்க இலக்கியத்தின் மீதான பற்றுதலுடன் அவற்றை கற்றுத் தேர்ந்த திறமை ஆகியவை சார்ந்து தங்கள் உரைகளை ஆற்றினார்கள்.

மொத்தத்தில் கலையும் இலக்கியமும் தமிழ்மொழியின் மேன்மையும் தமிழின் சுகந்தமும் மண்டபத்தில் நிறைந்திருந்த ஒன்றாக அன்றைய விழா நிறைவு பெற்றது.

மேலும் செய்திகள்
செய்திகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா
05 Jun 2026
செய்திகள்
Ind vs AFG- Sai Sudarshan Likely to Play at No 3 for
05 Jun 2026
செய்திகள்
புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளாக என்னென்ன வைத்துள்ளார் என்பதை
05 Jun 2026
செய்திகள்
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
05 Jun 2026
செய்திகள்
ENG vs NZ: Former England captain Michael Vaughan criticized the pitch at
05 Jun 2026
செய்திகள்
முதல்வர் விஜய் தலைமையில் தவெக முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. டாஸ்மாக், பட்ஜெட், மகளிர் உரிமை
05 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net