← முகப்பு தமிழ்

தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவரை

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 18 பார்வைகள்

தனது மனைவியின் உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீகஹவத்த, அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.

கடந்த 18 ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் மூச்சக்கர வண்டி ஒன்றில் வந்த அவர், குறித்த பெண்ணின் தலையில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் பலத்த தீக்காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது முகம் மற்றும் மார்புப் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அவரிடமிருந்து தற்போது மரண வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இப்பெண்ணின் சட்டபூர்வ கணவரே இந்தத் தீவைப்பை மேற்கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதற்கமைய செயற்பட்ட பொலிஸார், இன்று (22) முல்லேரியா பொலிஸ் பிரிவில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், இக்குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பெற்றோல் போத்தலும் முச்சக்கரவண்டியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

தீ வைத்தது தனது சொந்த மனைவிக்கே என சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் தங்களது முந்தைய திருமணங்களிலிருந்து சட்டபூர்வமாக விவாகரத்து பெற்ற பின்னரே, ஒருவரைக்கொருவர் திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், தனது மனைவி பல்வேறு நபர்களுடன் பழகியதாகவும், பல நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்ததாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவருக்கு எவ்வளவு அறிவுரை கூறினாலும் அவர் தொடர்ந்து அவ்வாறு நடந்துகொண்டதாகக் கணவன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீ வைத்த பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சந்தேக நபர் அந்தப் பெண்ணிடம் கூறியிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் எந்தவொரு குற்றச்செயலிலும் அல்லது குற்றச்சாட்டிலும் சிக்காத, முச்சக்கரவண்டி ஓட்டுநராகப் பணியாற்றிய ஒருவர் என பிரதேசவாசிகள் தெரிவித்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.

சந்தேக நபர் இன்று (24) புதுக்கடை இலக்கம் 08 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net