டாக்காவில் நடைபெற்ற வாரியத் தேர்தலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் (BCB) புதிய தலைவராக முன்னாள் பங்களாதேஷ் கேப்டன் தமீம் இக்பால் நான்கு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் மாதம் முதல் பி.சி.பி-யின் (BCB) தற்காலிகக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வந்த தமீம், புதிதாக அமைக்கப்பட்ட இயக்குநர் குழுவில் ஒரு இடத்தைப் பெற்ற பிறகு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பின் நடைபெற்ற குழுமத்தின் முதல் கூட்டத்தில் அவர் தலைவராக முறைப்படி அங்கீகரிக்கப்பட்டார்.
இந்தத் தேர்தல், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பங்காளதேஸ் கிரிக்கெட்டை வழிநடத்தும் 25 உறுப்பினர்களைக் கொண்ட குழுமத்தின் உருவாக்கத்தை நிறைவு செய்துள்ளது. இந்தப் பதவிக்கான வேட்பாளர்களில் அதிக வாக்குகளைப் பெற்ற பஹிம் சின்ஹா துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது தேர்தலுக்குப் பிறகு பேசிய தமீம், பங்களாதேஷ் கிரிக்கெட்டின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், நிர்வாக அமைப்பிற்குள் கூடுதல் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் உறுதியளித்தார். மேலும், சமீபத்திய சர்ச்சைகளைக் கடந்து, குழுக்கள் விளையாட்டின் எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
37 வயதான அவர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) நாட்டின் அதிக ஓட்டங்களைக் (Runs) குவித்த வீரராக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவர் என்பதும்,பங்களாதேஷின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.