← முகப்பு தமிழ்

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு… – அட்டமஸ்தானத்தின் தலைமை தேரர் பல்லேகம ஹேமரத்ன தேரர் கைது!

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 30 பார்வைகள்

அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமை தேரர்,

​அஷ்டமஸ்தானாதிபதி தேரரின் கைது தொடர்பான விடயங்கள் இன்று நீதிமன்றத்தில் அறிக்கைப்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

​பல்லேகம ஹேமரதன தேரர், சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

​தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இந்தச் சம்பவம் தொடர்பான உண்மைகளை நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து, சந்தேக நபரான தேரர் மற்றும் சிறுமியின் தாயாரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

​அனுராதபுரம் தலைமை நீதவான் சியபத் சசிது விக்ரமரத்ன, சந்தேக நபரான தேரருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதித்துள்ளார்.

​கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

​தற்போது பல்லேகம ஹேமரதன தேரர் உட்பட மூவர் இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net