← முகப்பு பதிவு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற

🕐 2 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 2 பார்வைகள்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற
சுரேஸ் சாலே நாடகம் உச்சத்தில்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயை விடுவிப்பதற்கான முயற்சிகள் உச்சமடைந்துள்ளது.

அநீதியான முறையிலும், மனிதாபிமானமற்ற ரீதியிலும் சுரேஸ் சாலே நடத்தப்படுவதாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் போராட்டம் ஒன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சுரேஸ் சாலே தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, அவருக்கு நியாயமான முறையிலான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி,; கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி சுரேஸ் சாலே கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தற்போதும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டு, அவரிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே போராட்டதில் ஈடுபட்ட பெண் ஒருவர்;, புலிக்கு பாலூட்டும் அனுரகுமார என உரத்த குரலில் சத்தமிட்டார். இந்நிலையில், சத்தியாக்கிரகத்தில் பங்கெடுத்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
பதிவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
டிரம்பின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்திவிட்டது என்று ஒரு மூத்த இஸ்ரேலிய
5 மணி நேரம் முன்னர்
பதிவு
இஸ்ரேலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை நிறுத்தப்போவதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது, ஆனால் இஸ்ரேல் லெபனானைத் தாக்கி
5 மணி நேரம் முன்னர்
பதிவு
பொலிசாரின் அச்சுறுத்தல்கள் நெருக்கடிகளுக்கு மத்தியில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள
8 மணி நேரம் முன்னர்
பதிவு
உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை
8 மணி நேரம் முன்னர்
பதிவு
இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஈரானின் இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலை இடைமறித்ததாகவும் தாக்குதல்கள் அபாயமில்லை என அறிவி
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net